முதல் வாரத்தில் 50 கோடி வசூல்.. இரண்டாம் வாரத்தில் அடிவைத்த மாநாடு!

வியாழன், 2 டிசம்பர் 2021 (16:57 IST)
மாநாடு படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து இரண்டாவது வாரம் வரை வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் மாநாடு திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் வாரத்திலும் பெரிய படங்கள் எதுவும் ரிலிஸ் ஆகாததால் தொடர்ந்து பல திரைகளில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்