இந்த புது அஸ்திரத்தை எறிந்திருப்பவர் வழக்கறிஞர் நன்மாறன். அவர் தணிக்கைக்குழுவுக்கு அளித்துள்ள புகார் மனுவில், லிங்கா படத்தில் நீதித்துறையையும், வக்கீல்களையும் அவமதிப்பது போல் காட்சிகள், வசனங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளுடன் படம் வெளிவந்தால் திரையுலகினருக்கும், வக்கீல்களுக்கும் இடையே தேவையற்ற தகராறுகள் ஏற்படும் (ஆமா, உள்நாட்டு போர் ஏற்பட்டாலும் ஏற்படும்) எனவே சர்ச்சையான காட்சிகள் உள்ளனவா என்று பார்த்த பிறகே லிங்காவை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் படத்தைப் பார்க்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.