சினிமா பாணியில் தப்பிய ஆயுள்தண்டனை கைதி !

புதன், 29 ஜூன் 2022 (15:42 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்து 3 நாட்கள் பரோலில் சென்ற ஆயுள்தண்டனை கைதி தலைமறைவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மத்திய சிறையில்  இருந்த ஆயுள்தண்டனை கைதி  ஹரி, தன் உடல் நலம் சரியில்லாத தாயை விசாரிக்க வேண்டும் என்று 3 நாள் பரோலில் சென்ற போது,  தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் தபாலில் அளித்த புகாரில் பீர்க்கங்கரணை போலீஸார் ஹரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்