சுயாதீன திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கத்தில் பார்வதி!

புதன், 19 அக்டோபர் 2022 (08:45 IST)
நடிகை பார்வதி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளவர்.

கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை இதுவரை மைய நீரோட்ட படங்கள் எதையும் எடுக்காமல் சுயாதீனமான படங்களையே எடுத்துள்ளார்.  இவர் இயக்கிய செங்கடல் மற்றும் வெள்ளை வேன் ஆகிய படங்கள் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய காளி ஆவணப்படத்தின் போஸ்டர் கடுமையான சர்ச்சைகளை எதிர்கொண்டது.

இந்நிலையில் முதல் முறையாக அவர் திரையரங்க விநியோக படம் ஒன்றை எடுக்க உள்ளார். இந்த படத்தில் பூ பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்