ஜெயம் ரவியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் முன்னணி நடிகை

வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்   ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜனகனமண. இப்படத்தை அடுத்து,  இயக்கு நர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில்  ஜெயம் ரவி ஒரு புதிய படத்தில்  நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெலியானது.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.

இவர்கள் இரண்டாம்  முறையாக  இணையும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி இப்போது ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிகக்வுள்ளதாகவும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள ஒரு படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்