உண்மை கதையால் ப்ரித்விராஜுக்கு சிக்கல்! – ”கடுவா” படத்திற்கு இடைக்கால தடை!

சனி, 11 டிசம்பர் 2021 (12:01 IST)
மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கடுவா படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடித்து ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் கடுவா. கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய கடுவாகுன்னெல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடைவிதிக்க கோரி கடுவாகுன்னெல் குருவச்சன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. தனது வாழ்க்கை கதையை ரஞ்சித் பணிக்கர் படமாக எடுக்க அனுமதி கேட்டதாகவும், சில நிபந்தனைகளோடு, பழிவாங்கும் நோக்கில் தான் செயல்பட்டது போல காட்டாமல் உண்மை தன்மையோடு எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

ஆனால் ப்ரித்விராஜ் எனது அனுமதி இல்லாமலே எனது பெயரில் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியான நிலையில் அதில் தன்னை தவறாக சித்தரித்திருப்பதாக காட்டி படத்திற்கு தடை கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடுவா படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்