போலீஸாக மாறிய கீர்த்தி சுரேஷ்

வியாழன், 1 செப்டம்பர் 2022 (20:47 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்காத புதிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ந்டிகை கீர்த்தி சுரேஷ். இவர்,  விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த  நிலையில்,  விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றியவர் பாக்யராஜ். இவர்,  ஒரு புதிய படம் இயக்கவுள்ளார். இப்படத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலான நிலையில், இப்படத்திற்கு சைரன் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்