தீபிகா படுகோன் இல்ல... சிம்பு 48 பட ஹீரோயின் இவங்க தான்!

சனி, 20 மே 2023 (08:53 IST)
துல்கர் சல்மான், ரக்ஷன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
 
மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.
 
இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. ரஜினி, அடுத்தடுத்து வேறு வேறு இயக்குனர்களோடு படம் பண்ணிவருகிறார். இந்நிலையில் ரஜினிக்காக தான் எழுதிய கதையைதான் இப்போது சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்க உள்ளார். 
 
இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். மேலும் தீபிகா படுகோன் இரண்டாவது கதநாயகியாக முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதிகம்  சம்பளம் கேட்டதால் அவருக்கு பதில் வேறு ஒரு பேமஸ் ஆன நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்