தடுப்பூசி செலுத்திய விஜய் பட நடிகை

சனி, 22 மே 2021 (20:28 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்று தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஏற்கனவே நடிகர் ரஜினி, ஜீவா, கார்த்தி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தற்போது கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் , தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்காரு வாரு பேட்டா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
மேலும் நடிகர் அசோக் செல்வன் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்