ஒரு இளம் நடிகரின் காதலை ஏற்க மறுத்த கீர்த்தி சுரேஷ்...

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (20:15 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் சினிமாவில் கீர்த்திக்கு புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. 

இதனைத்தொடர்ந்து கதைத்தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாள என 3 மொழிகளிலும் படங்களை வைத்திருக்கும் அவருக்கு திருமணம் என் செய்தி வெளியானது. 

ஆம், பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார், பாஜக கட்சியின் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை கீர்த்திக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு கீர்த்தியும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி தலைப்பு செய்தியாக பேசப்பட்டது.

இந்த செய்திக்கு கீர்த்தி சுரேஷ் , தான் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இளம்ஹீரோ கீர்த்தி சுரேஷிடன்  தனது காதலைச் சொன்னதாகவும், ஆனால், அதை அவர் ஏற்கவில்லை எனவும் காதல், திருமணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால் தன் நடிப்பில் கவனம் செலுத்த முடியாது என தெரிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்