அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை: கொரோனா புதுமொழி கூறிய கஸ்தூரி

புதன், 29 ஏப்ரல் 2020 (12:49 IST)
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அர்த்தராத்திரியில் குடைபிடித்தால்  அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்று கூறியுள்ளார்.
 
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி ஒன்றே தீர்வு என அனைவரும் கூறி வரும் நிலையில் சமீபத்தில் காய்கறி மற்றும் மளிகைக்கடைக்கு வருபவர்கள் குடை கொண்டு வர வேண்டும் என்று சேலம் ஆட்சியர் அறிவுறுத்தினார். குடையினால் வெயிலில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி சமூக இடைவெளியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என்று சேலம் ஆட்சியர் கூறியது நல்ல ஐடியா என்றும் அர்த்தராத்திரியில் குடைபிடித்தால்  அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும்- சேலம் ஆட்சியர் .
Good idea!
அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! #coronaparithabangal

— Kasturi Shankar (@KasthuriShankar) April 29, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்