விவாகரத்து விவகாரம்: சுசித்ராவின் கணவர் கதறல் விளக்கம்!!

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (11:56 IST)
பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகள் குறித்து அவரது கணவர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். 


 
 
நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுசித்ரா தெரிவித்தார். மேலும் போட்டோ ஒன்றையும் பதுவு செய்தார். 
 
இதை தவிர்த்து தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் சுசித்ரா டிவிட்டரில் தெரிவித்தார். விவாகரத்து விஷயத்தில் தனுஷை வம்புக்கு இழுத்தார். 
 
இந்நிலையில், சுசித்ராவின் கணவர் கார்த்திக் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், சுசித்ராவின் டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்திருப்பார்கள் இது சுசித்ரா இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
மேலும், சுசித்ரா ட்விட்டரில் கூறுவது எல்லாம் ஆதாரமற்றது. இது வேற பிரச்சனை மற்றும் தனிப்பட்டது. எனவே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கார்த்திக் டிவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்