சிறிய வயதில் முடியாததை இப்போது செய்த நடிகர் கார்த்தி… பெருமிதத்தில் வெளியிட்ட புகைப்படம்!

சனி, 13 மார்ச் 2021 (11:55 IST)
நடிகர் கார்த்தி சிறுவயதில் தன்னால் ஏறமுடியாத புளியமரத்தில் இப்போது ஏறிவிட்டதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்தி இப்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டு பொன்னியின் செல்வன் மற்றும் மித்ரன் இயக்கும் ஒரு படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள கார்த்தி ஒரு புளியமரத்தில் தொங்கிய படி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த படத்தோடு ‘சிறிய வயதில் இந்த புளிய மரத்தில் ஏற முடியாமல் பல முறை முயன்றிருக்கிறேன். அதை இப்போது செய்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்