ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும் பங்கேற்றனர்: நடிகர் கார்த்தி

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:14 IST)
ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும் பங்கேற்றனர் என்றும், இசை நிகழ்ச்சியில்  ஏற்பட்ட குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் காரணம் இல்லை என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
 
இசை நிகழ்ச்சியில் குளறுபடி குறித்த விவகாரத்தில்ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் கார்த்தி சிவக்குமார் ஆதரவு தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் எனது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர், நடந்தவை துரதிர்ஷ்டவசமானதே, 
 
நடந்த குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் எந்த வகையிலும் பொறுப்பல்ல, அவரை வெறுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.
 
மேலும் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்பார்கள் என நம்புகிறேன் என்றும்  நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்