கார்த்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

திங்கள், 17 ஜூலை 2017 (19:13 IST)
கார்த்தி நடித்துவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஷூட்டிங், நேற்று முன்தினம் முடிவடைந்தது.



 
‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத்தின் அடுத்த படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. ‘ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் ஜெய்சல்மாரில் நடைபெற்றது. அங்கு 40 நாட்கள் ஷூட்டிங் முடிந்தபிறகு, மறுபடியும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த 15ஆம் தேதியோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்