ஆகஸ்ட் 27-ல் காந்தாரா 2 ஷூட்டிங் தொடக்கம்?

வியாழன், 15 ஜூன் 2023 (09:09 IST)
கடந்த ஆண்டு(2022)  செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காந்தாரா 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.  படத்தில் நிறைய காட்சிகள் மழைக் காலத்தில் நடப்பது போல கதை அமைந்துள்ளதால் ஆகஸ்ட் இறுதியில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்