ரஜினிதான் என் துரோணாச்சாரியார்… கூலி படத்தில் நடிக்கும் கன்னட நடிகர் உபேந்திரா நெகிழ்ச்சி!

vinoth

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (10:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் சமீபத்தில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்தார். இவர் கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ரஜினி குறித்து அவர் பேசும்போது “ரஜினிதான் என் துரோணாச்சாரியர். தொழில் வாழ்க்கையிலும் சரி, ஆன்மீக வாழ்க்கையிலும் சரி அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரை நான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கிறேன்.  கூலி படத்தில் நான் இணைந்தது சம்மந்தமாக தயாரிப்புத் தரப்புதான் அறிவிக்கவேண்டும்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்