மக்கள் நாட்டை விட்டுச் செல்வது நல்லதுதான்… கங்கனாவின் அடடே பதில்!

vinoth

திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:27 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீஸாகி சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது கங்கனாவின் ஒரு கருத்து மீண்டும் அவரை சர்ச்சைகளில் இழுத்துவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஒருவர் கங்கனாவிடம் “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவது அதிகமாகிவிட்டதே” எனக் கேட்க அதற்கு கங்கனா அளித்துள்ள பதில்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கங்கனா ”நாட்டில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. அதனால் மக்கள் இதுபோல நாட்டை விட்டுச் செல்வது நல்லதுதாம்” எனக் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பதில் அவர் மேல் விமர்சனங்கள் எழ வழிவகுத்துள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கங்கனாவின் அரசியல் அறிவு என்பது இவ்வளவுதான் என பலரும் விமர்சித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்