மீண்டும் காஷ்மீருக்கு ஷூட்டிங் செல்லும் சிவகார்த்திகேயன் படக்குழு!

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:31 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு ராணுவவீரரின் கதையைதான் இந்த படத்தில் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் முக்கியமான சில காட்சிகளை படக்குழு காஷ்மீரில் படமாக்கியது.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்