தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. 2011 கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைப் பிடித்து போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு பொய் வழக்குத் தொடர்ந்தது. அவர்கள் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் இருக்க முடியாது என்றவர் இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கு மட்டுமின்றி மனிதகுலத்துக்கே விடுக்கப்பட்ட சவால் என்றார். மேலும், இந்திய அரசு உடனே அந்த ஐந்து மீனவர்களின் உயிரையும் காக்க வேண்டும். இல்லையெனில் இங்கே அரசு ஒன்று இருப்பதற்கான அர்த்தமே இல்லாமலாகிவிடும் என்றார்.