நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்த கமல்-ரஜினி

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (22:04 IST)
கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீடும், ரஜினியின் போயஸ் கார்டன் வீடும் ஒருசில கிலோ மீட்டர்தான் இடைவெளி என்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து கொள்வது அபூர்வமாகவே நடைபெற்று வருகிறது.



 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்குபவராகவும், ரஜினிகாந்த் பார்வையாளராகவும் கலந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் கலந்து கொள்ளும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விழாவின் மேடையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளையதிலகம் பிரபுவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்