1100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த பிரபாஸின் கல்கி!

vinoth

வியாழன், 25 ஜூலை 2024 (16:38 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் பிரபாஸ் பாகுபலி 2 படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ரிலீஸாகி ஒரு மாதத்தை நெருங்கும் இந்த வேளையில் கல்கி படம் உலகம் முழுவதும் திரையரங்கு மூலமாக 1100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 மற்றும் கேஜிஎஃப் ஆகிய படங்களுக்கு அடுத்து அதிக வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனையை கல்கி நிகழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்