2050ஆம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்கும்? புதுமுகம் இயக்கும் ‘கலியுகம்’ திரைப்படம்!

திங்கள், 27 டிசம்பர் 2021 (20:17 IST)
2050-ம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்றும் டெக்னாலஜி மற்றும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்றும் கூறும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது
 
இந்த படத்தை அறிமுக இயக்குனர் புரமோத் சுந்தர் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பிசி ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் சாரதா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் கிஷோர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்