கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு

சனி, 18 நவம்பர் 2017 (12:41 IST)
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

 
யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல, தன் கெரியரில் தானே மண்ணள்ளிப் போட்டுக்  கொண்டவர் சிம்பு. அப்படியும் ஒருசில வாய்ப்புகள் வருகிறதென்றால், எல்லாம் அவர் திறமை மீதான நம்பிக்கை மட்டுமே.
 
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், தன் படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் மணிரத்னம். அதன்பிறகு கலைப்புலி எஸ்.தாணு சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப்  போகிறாராம்.
 
டி.ராஜேந்தர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளாராம் எஸ்.தாணு. ‘நேரத்திற்கு மகனை ஷூட்டிங் வரச்சொல்றேன்’ என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம் டி.ஆர். சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’ படத்தைத் தயாரித்தவர்  இவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்