'பாகுபலி' இயக்குனரின் அடுத்த படத்தில் 2 சூப்பர் ஸ்டார்கள்

திங்கள், 20 நவம்பர் 2017 (07:00 IST)
இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி, பாகுபலி, மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து தற்போது புதிய படத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன


 


முதல்கட்டமாக இந்த படத்தில் ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஜூனியர் என்.டி.ஆர் முதன்முதலில் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் ராம்சரண்தேஜா ஏற்கனவே ராஜமெளலி இயக்கிய 'மாவீரன்' படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த முழு விபரங்களை இயக்குனர் ராஜமெளலி மிக விரைவில் வெளியிடவுளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்