துபாயில் ப்ரமோஷனை தொடங்கும் ஜிகர்தண்டா 2 படக்குழுவினர்!

ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:18 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனை துபாயில் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி தொடங்க உள்ளார்களாம். அடுத்த வாரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்