செக் மோசடி - நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

செவ்வாய், 25 நவம்பர் 2014 (09:30 IST)
செக் மோசடி வழக்கில் முன்னாள் நடிகையும், இந்நாள் தயாரிப்பாளருமான ஜீவிதாவுக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறையும், 25 லட்சங்கள் அபராதமும் விதித்துள்ளது.
தமிழில் ஹீரோயினாக பல படங்களில் நடித்த ஜீவிதா தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகியவர் கணவர் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தார்.
 
சேகர் ரெட்டி என்பவருக்கு ஜீவிதா தந்த 22 லட்சத்துக்கான காசோலை பணமில்லாமல் திரும்ப வந்துள்ளது. காசோலை திரும்பி வந்த பின்பும் ஜீவிதா சேகர் ரெட்டிக்கு வேறு காசோலையோ, பணமோ தரவில்லை. அதனால் அவர் ஜீவிதா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். 
 
கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜீவிதா அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் சில தினங்கள் முன்பு ஜீவிதா பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த  நீதிமன்றம், நேற்று ஜீவிதாவுக்கு இரண்டு வருடங்கள் சிறையும், 25 லட்சங்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்