உதவி இயக்குனருக்கு ஜோடியான நடிகை

புதன், 12 ஜூலை 2017 (12:01 IST)
பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதா, ரா.பார்த்திபன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
 


 

தமிழ்நாடு – கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு பிரச்னையை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது. மலையாள இயக்குனரான நிஷாத், இந்தப் படத்தை இயக்குகிறார். ரா.பார்த்திபன் முக்கிய வேடமேற்று நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஜெயப்பிரதா நடிக்கிறார். கமலின் ‘தசாவதாரம்’ படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மறுபடியும் தமிழில் நடிக்கிறார் ஜெயப்பிரதா.

கேரளா தனி மாநிலமாகப் பிரிந்த 1956ஆம் ஆண்டு தான் கதைக்களம். ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை கே.பாக்யராஜ் இயக்கியபோது, அந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ரா.பார்த்திபன். அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜெயப்பிரதா, இப்போது ரா.பார்த்திபனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்