”எல்லாம் நேற்று நடந்தது போல உள்ளது…” 19 வருட திரைப்பயணம் குறித்து ஜெயம் ரவி அறிக்கை!

புதன், 22 ஜூன் 2022 (09:49 IST)
சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜெயம் ரவி அது சம்மந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக பூமி திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது அவர் அகிலன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அகமது இயக்கும் படம், இயக்குனர் எம் ராஜேஷ் கூட்டணியில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து ‘அகிலன்’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது 19 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி. அதில் “எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. என்னுடைய முதல் படமான ஜெயம் படத்துக்காக கேமராவை எதிர்கொண்டது நினைவிருக்கிறது.இது ஒரு மேஜிக் போல உள்ளது. என்னுடைய திரை பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர்.எனது ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டும் இல்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதில் நிறைய பொறுப்புகளை வழங்கியுள்ளன” எனக் கூறியுள்ளார்.

#19YearsOfJayamravi

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்