உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து, 6ம் தேதி அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் திரையுலகினர் இன்று காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.