வெங்கட்பிரபுவுக்கு கங்கை அமரன் செய்தது சரியா? ரசிகர்கள் கோபம்

செவ்வாய், 21 ஜூன் 2022 (17:37 IST)
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இருவரும் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ராஜபார்வை என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அதன்பின்னர், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல மீடியாவிற்குப் பேட்டியளித்த கங்கை அமரன் அதில், தன் மகன் வெங்கட்பிரபு விரைவில் விஜய்- அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறினார். இது சமூகவலைதளத்தில் பரபரப்பானது.

ஆனால், இது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும், இத்தகவலால்  நடிகர் அஜித்குமார் சங்கட்டத்திற்கு ஆளானதாகவும், அதனால், வெங்கட்பிரப்வுவின் மங்காத்தா-2 பட கனவு  நிஜமாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்