ஒரே படத்தில் நடித்தாலும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை: நடிகர் சூரி

வெள்ளி, 17 மார்ச் 2017 (13:29 IST)
சுசீரந்தின் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு  இரண்டாம் பாகம் எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் காமெடியனாக வரும் நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த கேரக்டரை தொடர்கிறார்.
 
 
கதைப்படி முதல் பாகத்தில் நாயகனாக நடித்த விஷ்ணு இறந்துவிட்டதால், இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்கிறார் விக்ராந்த். முதல் பாகத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
 
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. அவரது நண்பராக கஞ்சா கருப்பு முதல் பாகத்தில் நடித்திருக்கிறார். இராண்டாம் பாகம் முழுக்க சூரிதான் விக்ராந்துடன் நடிக்கிறாராம். இந்நிலையில் ஒரே படத்தில் நடித்தாலும் சூரியும், கஞ்சா கருப்புவும் ஒரு சீனில்கூட இணைந்து நடிக்கவில்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்