சந்தானம் தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் என்று இரு படங்களில் நடித்து வருகிறார். அதில், தில்லுக்கு துட்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சோனியா அகர்வால், பிரசன்னா இருவரும் கலந்து கொண்டனர். சென்னை நகரில் புதிதாக கபே ஒன்று திறக்கப்படுவது போன்ற அந்தக் காட்சியில் நடிகர்களாகவே சோனியா அகர்வால், பிரசன்னா இருவரும் நடித்தனர். இந்த கெஸ்ட் ரோலுக்காக அவர்கள் பணம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.