தனியார் தொலைக்காட்சிக்கு கமல் அளித்த பேட்டியின்போது, இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தை அவமதித்து விட்டார் என்று வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆதிநாதர் சுந்தரம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மே 5ஆம் தேதி (நாளை) கமல் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் கமல். அத்துடன், அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் எனத் தெரிகிறது.