பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலரை அவர்களின் செயல்களால் ரசிகர்கள் வெறுக்கிறார்கள், அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியது. இதனால் ரசிகர்களுக்குள் பெரிய கோபத்தை ஏற்படுத்தியதோடு, எதற்காக அப்படி செய்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
நேற்றைய புரொமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக சென்றுள்ள பிந்து மாதவி, காயத்ரியிடம், பரணியை பற்றி சரமாரி கேள்வி கேட்கிறார். பிந்து கூறுகையில் நீங்கள் அனைவரும் பரணியை டார்கெட் செய்ததால் தான் அவர் தப்பியோட முயன்றார். அந்த நேரத்தில் யார் தலைவர், ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று கேட்ட பிந்துவிடம், காயத்ரி பதில் கூற முடியாமல் திணறுவதுபோல் இருந்தது. ரசிகர்களும் காயத்ரி என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.