டிக்கெட் விற்க பலூனில் பறக்கும் இளையராஜா அண்ட் விஷால்

சனி, 5 ஜனவரி 2019 (15:37 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பாராட்டு விழா ஒன்று ந்டத்த திட்டமிட்டுள்ளனர். 
 
இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி விழா நடத்தப்படும் இவ்விழாவில் இளையராஜாவை கவுரவிக்கும் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் பணத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் உள்ளனர். 
 
இந்நிலையில் இந்த விழாவிற்கான டிக்கெட்டை விற்க இளையராஜா 75 என்று எழுதப்பட்ட பிரமாண்ட பலூன்கள் பறக்கவிடப்படும். மேலும், இளையராஜாவும், விஷாலும் தனித்தனி பலூன்களில் பறந்து டிக்கெட்டி விற்பனையை துவங்கி வைக்கயுள்ளனர்.  
 
இந்த பலூன்கள் நாளை சென்னை புறநகர் பகுதியான மறைமலை நகரை அடுத்த மகேந்திரா சிட்டியில் பறக்கவிடப்பட உள்ளது. 
 
மேலும், இளையராஜா பாராட்டு விழா பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்