கமல், ரஜினியை கலாய்த்த இளையராஜா...?

வெள்ளி, 23 ஜனவரி 2015 (09:24 IST)
ஷமிதாப் படத்தின் பாடல்கள் வெளியீட்டை இயக்குனர் பால்கி ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கான பாராட்டுவிழாவாக நடத்தினார். மும்பையில் நடந்த இந்த விழாவை முன்னின்று நடத்தியவர் அமிதாப்பச்சன். அவரது அழைப்பின்பேரில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.


 
விழா முடிந்து சென்னை திரும்பிய இளையராஜாவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் வளைத்துக் கொண்டனர். அப்போது பேசிய இளையராஜா, அமிதாப்பின் அன்பை குறித்து நெகிழ்ந்தார். கமல், ரஜினி விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தெரியாது, அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன் என்றார்.
 
இளையராஜாவின் எந்த பாராட்டு விழாவிலும் தவறாமல் கமலும், ரஜினியும் கலந்து கொள்கிறார்கள். இளையராஜாவைத் தாண்டி யாரும் சாதிக்கவில்லை என தவறாமல் பேசுகிறார்கள். ஆனால் பல வருடங்களாக இவர்கள் இருவரும் இளையராஜாவை தங்கள் படங்களில் பயன்படுத்துவதே இல்லை. 
 
கமல், ரஜினி விழாவில் கலந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது என்று இளையராஜா கூறியது இதனால்தான் என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வெப்துனியாவைப் படிக்கவும்