இரண்டு குழந்தைகள் பெற்றால் நோ விவாகரத்து - ஒரு வில்லங்க திரைப்படம்

சனி, 7 மே 2016 (13:01 IST)
படத்தின் பெயர் வில்லங்கம் என்றாலும் அது சொல்லவரும் கருத்து மிகவும் விரும்பக் கூடியது.


 
 
இன்று விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன. கணவன், மனைவிக்கு நடுவிலான ஈகோவுக்கு முதல் பலியாவது குழந்தைகள். தாய், தந்தை இருவரில் ஒருவரை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பிரிய வேண்டிய துர்பாக்கியத்துக்குள்ளாகிறார்கள் குழந்தைகள்.
 
இதனை மையப்படுத்தி பத்திரிகையாளர் ரா.நா.சரவணன் இயக்கிவரும் படம்தான், வில்லங்கம். இதில் நந்தா இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்கிறார். இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால் அந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வில்லங்கம் தயாராகிறது.
 
சரவணனின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்