உங்களையும், வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன்- நடிகர் சிவக்குமார்

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (16:52 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன்.

இப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இந்தியாவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள், விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட பலரும் கருத்துகள் கூறினர்.

இந்த நிலையில்,  ‘’தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், ''தம்பி மாரி செல்வராஜுக்கு! மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளாது. உங்களையும் வடிவேலுவை சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்