“கவர்ச்சியான வேடங்களுக்காகக் காத்திருக்கிறேன்” – அஞ்சலி

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (11:49 IST)
கவர்ச்சியான வேடங்களில் நடிக்கக் காத்திருப்பதாக அஞ்சலி தெரிவித்துள்ளார்.



 
ராம் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் அஞ்சலி. அடுத்ததாக, ஜெய் ஜோடியாக நடித்த ‘பலூன்’ ரிலீஸாக இருக்கிறது. அத்துடன், ராமின் இயக்கத்தில் ‘பேரன்பு’ படத்தில் நடித்துள்ளார்.

மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், திருநங்கையாக நடித்துள்ளார் அஞ்சலி என்று செய்தி வெளியானது. அதை மறுத்துள்ள அஞ்சலி, திருநங்கை வேடத்தில் நடித்தது தான் இல்லை எனவும், மலையாள மாடல் அஞ்சலி தான் அந்த வேடத்தில் நடித்துள்ளார் எனவும் விளக்கம் அளித்துள்ளார். சித்தியுடன் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்ட அஞ்சலி, நல்ல படங்களில் நடிக்கும் அதே சமயத்தில், கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கிளாமர் வேடங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்