குழந்தை பெற்றுக்கொள்வது வேதனையான செயல்முறை - சமந்தா

வியாழன், 27 ஜனவரி 2022 (15:31 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்து வர்ந்தார் சமந்தா.

இதன்பின்னர், நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவு ஒரே நாளில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதையடுத்து சமீபத்தில்  நாக சைதன்யா ஒருபேட்டியளித்தார்..அதில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா தனது விவாகரத்து குறித்த பதிவை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் சமந்தா. இதனால் இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சமந்தா தற்போது  சுவிட்சர்லாந்தில்  விடுமுறையைக் கழித்து வரும் நிலையில், குழந்தை பெற்றுக் கொள்வது வேதனையானது என அவர் தெரிவித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.  அதில்,’ பெண்கள் மிகவும் வலிமையானவர், ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வது வேதனையான முறை; இதுவொரு வலி மிகுந்த செயல்முறை ‘எனது தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடிகர்  நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, சமந்தா தான் விவகாரத்து குறித்து முடிவெடுத்தார் எனது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்