காவலர் பணிக்கான விண்ணப்பித்த சன்னி லியோன்? ஹால் டிக்கெட் வெளியானதால் பரபரப்பு

Siva

ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (09:40 IST)
பிரபல நடிகை சன்னி லியோன் உத்தரபிரதேசம் மாநிலத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபலங்களின் பெயர்களில் அரசு வேலைக்கு போலியாக விண்ணப்பிக்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாரோ மர்ம நபர் சன்னிலியோன் பெயரில் காவலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. 
 
இதனை சரியாக சரிபார்க்காத அரசு ஊழியர்கள் சன்னி லியோன் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதோடு அவருக்கு ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளனர். இந்த ஹால் டிக்கெட் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சன்னிலியோன் பெயர், புகைப்படத்தை வைத்து விண்ணப்பம் செய்த மர்ம நபர் குறித்து உத்தர பிரதேச மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வழியாக உள்ளது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்