அடுத்தடுத்து இரண்டு சூர்யா படங்களைக் கைப்பற்றிய இசையமைப்பாளர்!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:55 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள இரண்டு படங்களுக்கும் ஜி வி பிரகாஷ்தான் இசையமைக்க உள்ளாராம்.

நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தின்  வெற்றிக்குப் பின் உற்சாகமாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கும் அவர் அடுத்து பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய இரு படங்களில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களுக்குமே இசையமைக்கப் போவது ஜி வி பிராகாஷ்தான் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகரான பின்னர் இசை வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டே வந்த ஜி வி பிரகாஷ் இப்போது மீண்டும் பிஸியாகி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்