கௌதம், சிம்பு - அப்படி இவங்களுக்குள் என்னதான் சண்டை?

செவ்வாய், 5 ஜூலை 2016 (13:00 IST)
கௌதம், சிம்பு கருத்து வேறுபாடு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்ப் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தாமல் தெலுங்கு பாடல் வெளியீட்டை பிரமாதப்படுத்தியுள்ளார் கௌதம்.


 
 
கௌதமின் கஷ்ட நேரத்தில் தோள் கொடுத்தவர் சிம்பு. ஆனால், அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில் கௌதமுக்கு தேவையில்லாமல் குடைச்சல் கொடுத்து வந்திருக்கிறார். தள்ளிப் போகாதே பாடலை படமாக்க அவர் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை என கூறப்படுகிறது. 
 
சிம்பு தரப்போ, சம்பளம் தந்தால் பாடலில் நடித்து தரலாம் என்கிறது. இந்நிலையில் இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் கதவுகளை தட்டியுள்ளது.
 
சிம்பு படத்தை இயக்கிக் கொண்டே தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை கௌதம் இயக்குவதே இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்