முன்னணி நடிகையின் சமூக வலைதள கணக்குக்ள் முடக்கம்

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:13 IST)
பிரபல நடிகை  யாமி கவுதமியின் வலைதள கணக்கை  மர்ம   நபர்கள் முடக்கி  உள்ளனர்.

தமிழ்  , இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் யாமி கவுதமின்.  இவர் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கணக்குகள் தொடங்கி புகைப்படங்களையும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் யாமி கவுதமியின் சமூக வலைதள கணக்கை மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கியுள்ளனர்.

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர்.  யாமி கவுதமியின் சமூக வலைதள கணக்கை மீட்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்