மெர்சல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து அசத்திய நடிகர் விஜய்!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:47 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மெர்சல்” படத்திற்கு ரசிகர்களிடயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. விஜய்யும் மூன்று  கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

 
தற்போது மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது.  இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வரும் என அறிவித்துள்ளனர், இந்நிலையில் விஜய்க்கு மெர்சல் படக்குழுவை மிகவும் பிடித்துள்ளதாம்.
 
விஜய் எப்போதேமே தன் படம் முடிவடையும் நேரத்தில் படக்குழுவினர்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி  கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மெர்சல் படக்குழுவினர்கள் 200 பேருக்கு கோல்ட் காயின் கொடுத்துள்ளாராம், இதனால், படக்குழுவினர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்