பிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு....அதிர்ச்சி சம்பவம்

சனி, 7 நவம்பர் 2020 (16:58 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் கிங் வான் உள்ளிட்ட பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள அட்லாண்டா நகரில் ஒரு கிளப் இயங்கி வந்தது. அங்கு டேவோன் பென்னட் என்ற இளைஞர் (25) தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், ஒருவருக்கொருவர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் ரேப்பர் டேவான் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் 3 பேர் படுகாயமடைந்து, தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்