மாணவி தற்கொலை வழக்கில் தேடப்படும் யுடியூப் பிரபலம்!

சனி, 11 செப்டம்பர் 2021 (11:36 IST)
திருச்சி அருகே மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழகில் பிரபல யுடியுபர் ஒருவர் போலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

யுடியூபில் அதிகளவு பிராங்க் என சொல்லப்படும் வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் ஆனவர் பிராங்க் பாஸ் சூர்யா. இந்நிலையில் இவருக்கு திருச்சியைச் சேர்ந்த விஷுவல் கம்யுனிகேஷன் மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆனால் சூர்யா இதுபோல பல பெண்களிடமும் பேசி வருவதால் மாணவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி இருவரும் தொலைபேசியில் பேசிய போது சண்டை எழுந்துள்ளது. இதையடுத்து மாணவி தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டுள்ளார். அவரை மயங்கிய நிலையில் மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் யுடியூபரை போலிஸார் இப்போது தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்