அதிவேகமாக காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகை

செவ்வாய், 19 மார்ச் 2019 (13:33 IST)
அதிவேகமாக காரை ஒட்டி ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம்  மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராஷ்மி தனது காரை வேகமாக ஒட்டி வந்துள்ளார் அப்போது ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள கஜூவாக்கா என்ற இடத்தில் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது கார் மோதியது. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்நபரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
பின்னர் ஆவேசம் அடைந்த மக்கள் ராஷ்மி காருக்குள் இருப்பதை அறிந்து போலிஸுக்குத் தகவல் கொடுத்தனர் தற்போது போலீஸார் ராஷ்மி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்