பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு பிரபல நடிகை ஆதரவு...

திங்கள், 7 ஜூன் 2021 (17:09 IST)
பிரபலமான நாகினி சின்னத்திரை நாடக நடிகர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு  நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டில் தில் கி நசர் சே கூப்சூரத் என்ற இந்தி நாடகம் மூலம் அறிமுகமானவர் பேர்ல் வி பூரி. பல்வேறு இந்தி நாடகங்களில் நடித்துள்ள இவர் நாகின் என்ற இந்தி நாடகத்தின் 3வது பாகத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வி பூரியும், அவர்களது நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து சிறுமி மற்றும் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது

இந்நிலையில் நாகினி சீரியலில் நடித்து வரும் நடிகை அனிதா ஹசானந்தனி, தனக்கு வி பூரியை நன்றாக தெரியும் என்றும், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் அல்ல. உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.,

மேலும், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜோம்பி ஆகிய படங்களில் நடித்துள்ள தமிழ் நடிகை யாஷிகா ஆனந்த் பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நடிகர் பியர்ஸ் புரி மிகவும் அன்புடன் பேசிப் பழகக்கூடியவர். உண்மை வெளிவரும் வரை பொறுமையாக இருப்போம். நான் பியர்ல் புரிக்கு ஆதரவு அளிகிறேன்….எனது நண்பர் மீண்டு வருவார் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்